×

மெக்ஸிகோவில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலி

மெக்ஸிகோ: வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 47 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘லியோன் நகரத்தைச் சேர்ந்த நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் விடுமுறையை கழிப்பதற்காக பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மெக்ஸிகோவில் இருந்து நயாரித்திற்கு சென்றனர். பின்னர் குவாயாபிடோஸிலிருந்து புவேர்ட்டோ வலார்டாவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பேருந்து கழிந்து 15 பேர் பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்’ என்று கூறினர்.

Tags : Mexico , 15 killed in bus overturn in Mexico
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...