சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், இழப்பீடு நிதி மேலாண்மை மற்றும் திட்ட ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சுப்ரத் மொஹபத்ரா தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக (வனப்படை தலைவர்) நியமிக்கப்படுகிறார். இந்த பதவியில் இருந்த சையது முஸாமில் அப்பாஸ் ஓய்வு பெற்றதையடுத்து இவர் நியமனம் செய்யப்படுகிறார்