சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். ஜனவரி 31-ம் தேதிக்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என்று அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பகுதிவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். தினசரி 3 முதல் 4 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.