சென்னை: நாளை முதல் புதிய முறையில் ரசீது அச்சடித்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய உணவு வழங்கல் துறை உத்தரவு அளித்துள்ளது. புதிய முறையை பின்பற்றாமல் ரேஷனில் அரிசி விநியோகிக்க கூடாது என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் ஒன்றிய, மாநில அரசுகளின் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.