சென்னை: தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம் (ராமநாத சுவாமி திருக்கோயில்), திருவண்ணாமலை (அருணாசலேஸ்வரர் கோயில்) , மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.