×

பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரசு மருத்துவர் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பாருக் தீர்ப்பு அளித்துள்ளார்.  கொரோனா காலத்தில் 2021-ல் தேனாம்பேட்டை விடுதியில் தங்கியிருந்த சக பெண்மருத்துவரை வன்கொடுமை செய்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளனர்.


Tags : Chennai ,Rajiv Gandhi Government Hospital ,Chennai Mahla , Chennai Rajiv Gandhi Govt Hospital doctor sentenced to 10 years in prison in sexual assault case: Chennai Magistrate's Court
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...