நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். பட்டாசு வெடித்த விபத்தில் வீட்டில் இருந்த மூதாட்டி பெரியக்காள் (73) மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைகுமார் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தில்லைகுமாரின் மனைவி பிரியா மற்றும் தாயார் செல்வி உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதை தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.