நொய்டா: உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த இந்தியாவின் இருமல் மருந்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நொய்டாவில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.