×

கோவையில் நள்ளிரவில் பரபரப்பு வங்கி ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளை முயற்சி

கோவை: கோவை போத்தனூர் பொள்ளாச்சி ரோடு சிட்கோ பகுதியில் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளை உள்ளது. இங்கு ராஜ்குமார் (36) என்பவர் மேலாளராக உள்ளார். இவர், கடந்த 28ம் தேதி இரவு வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் வங்கியின் ஜன்னல் கம்பியை ஆக்சா பிளேடால் அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வாகனங்கள் வரவே அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்று விட்டனர். இதனால், லாக்கரில் இருந்த லட்சக்கணக்கான பணம், தங்க நகைகள் தப்பியது. நேற்று காலை ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டதை பார்த்து மேலாளர் ராஜ்குமார் புகாரின்படி போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.

Tags : Coimbatore , In Coimbatore, there was an attempt to rob a bank by cutting the window wire at midnight
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...