×

சொறி, சிரங்கு மருந்தை குடித்து புழல் சிறை கைதி தற்கொலை

புழல்: சொறி, சிரங்கு மருந்தை குடித்து புழல் சிறை கைதி தற்கொலை செய்து ெகாண்டார். சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (32). இவருக்கு, போக்சோ வழக்கில் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சொறி, சிரங்கு உள்ளிட்ட நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சொறி, சிரங்கு சிகிச்சைக்காக வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்ததும் சக கைதிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சிறை காவலர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, நாகராஜை மீட்டு சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலையில் நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Puzhal Jail , Puzhal Jail inmate commits suicide after taking medicine for rash and scabies
× RELATED புழல் சிறையில் கைதிகளை சந்திக்க...