பொன்னேரி: மீஞ்சூர் அருகே வடஸ்ரீரங்கம் என அழைக்கப்படும் தேவதானம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 5 தலைகளை குடையாக விரித்தபடி உள்ள ஆதிசேஷன், தனது உடலை 3 மடிப்புகளுடன் கொண்ட கூடிய விரிப்பில் ரங்கநாதர் பள்ளி கொண்டது போல் வீற்றிருக்கிறார். இத்தகைய சிறப்புமிக்க ரங்கநாதர் கோயிலில் வரும் 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது. முன்னதாக ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனவரி 1, 2 தேதிகளில் கோயில் நடை திறந்திருக்கும்.