×

டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது கார் விபத்தில் உயிர் தப்பிய ரிஷப் பன்ட்: கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

டேராடூன்: டெல்லியில் இருந்து காரில் உத்தரகாண்ட் சென்ற போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்  பன்ட் விபத்தில் சிக்கினார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட், டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது டெல்லி டெஹ்ராடன் நெடுஞ்சாலையில், ஹம்மத்பூர் ஜால் என்னும் இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையின் டிவைடரில் கார் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.

அதையடுத்து மளமளவென்று கார் தீப்பிடித்து எரிந்தது. இதனைத் தொடர்ந்து,  கார் கண்ணாடியை உடைத்து கொண்டு பன்ட் உயிர் தப்பினார்.  இருந்தும் அவரது தலை, முதுகு மற்றும் கால்களில் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரை மீட்ட போலீசார் டேராடூன் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, தீப்பிடித்த அவரது காரையும் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.


Tags : Rishabh Pant ,Delhi ,Uttarakhand , Rishabh Pant survived a car accident while traveling from Delhi to Uttarakhand: Cricket fans are shocked
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...