இராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்வதால் ஜனவரி .10 வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் எச்சரிக்கை மணி ஓசை ஒலித்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை ஐஐடி வல்லுநர்கள் காலி ரயில் பெட்டிகளை பாம்பன் ரயில் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர்.