திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 8ம் திருநாள் நடைபெற்றது. நம்பெருமாள் முத்துக்குல்லா எனப்படும் ராஜமுடி கிரீடம் அணிந்து, வைர அபயஹஸ்தம், முத்துமாலை, ரத்தின மகர ஹண்டி, அடுக்கு பதக்கம் மற்றும் பின்புறம் புஜகீர்த்தி உள்ளிட்ட திருவாவரணங்களை அணிந்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.