சென்னை: பாரத பிரதமரின் அன்னையின் மறைவு செய்தி இதயத்தில் பேரிடியாக இறங்கியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் மறைவு இந்திய மக்களுக்கே பெரிய இழப்பாகும் என பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் உயர்விற்கும், வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர் தாயார் ஹீராபென் என வாசன் தெரிவித்திருக்கிறார்.