×

 கொடநாடு கொலை வழக்கு கூடலூரில் சிபிசிஐடி விசாரணை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவின் எஸ்டேட் மற்றும் சொகுசு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று கூடலூர் நெடுஞ்சாலைத்துறை ஓய்வு விடுதியில் கோவையில் இருந்து வந்த சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற நாளில் அங்கிருந்த நபர்கள், அதிகாலை நேரத்தில் 2 கார்களில் கூடலூர் வழியாக கேரளா சென்றதாக தெரிகிறது. இதில், ஒரு காரில் வந்த நபர்களை கூடலூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சோதனை செய்து விசாரித்ததாக தெரிகிறது.  

அப்போது காரில் இருந்த சித்தன் ராய் என்பவர் கூடலூரில் தனக்கு அறிமுகமான சாஜி என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது தொடர்பாக, சாஜி மற்றும் அனிஷ் ஆகியோர் காவல் துறை விசாரணையில் இருந்த காரை அனுப்பி வைக்க உதவியதாக தெரிகிறது. இது தொடர்பாக, சம்பவத்தன்று பணியில் இருந்த போலீசார் மற்றும் கூடலூர் வழியாக இவர்கள் கேரளா செல்ல உதவியதாக கருதப்படும் நபர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags : CBCID ,Koda Nadu ,Gudalur , CBCID investigation in Koda Nadu murder case at Gudalur
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...