×

உதகை -கூடலூர் நெடுஞ்சாலையில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் டயர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை -கூடலூர் நெடுஞ்சாலையில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் டயர் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி டயரில் திடீரென தீ பற்றியது. இதை அறிந்த லாரி ஓட்டுநர்உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தீயணைப்புத் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு டயரில் ஏற்பட்ட தீயை உடனடியாக  அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

Tags : Kuddalore highway , Utagai - Kudalur Highway, Gas Cylinder, Fire Accident, Fire Deptt
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...