புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் மீதான தீண்டாமை கொடுமை முடிவுக்கு வருகிறது. அய்யனார் கோயிலில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலும்பூர் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.