தேனி: தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மூன்றாம் பாசன பகுதிக்கு வினாடிக்கு 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் 1,533 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களுக்கு பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.