புதுக்கோட்டை : புதுக்கோட்டை தீண்டாமை சம்பவம் விசாரிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் முடிவு செய்துள்ளது. துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.