சென்னை: கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்க முயன்ற ஆப்ரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.