×

தேசிய சீனியர் பூப்பந்தாட்ட போட்டி: தமிழக வீரர்கள் 20 பேர் பங்கேற்பு

திருவொற்றியூர்: கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாராகரா பகுதியில் 68வது தேசிய சீனியர் ஆண்கள், பெண்கள் பூப்பந்தாட்ட பட்டயப் போட்டி கடந்த 24ம் தேதி முதல் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் 30 மாவட்டங்களை சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் சார்பில் திருவொற்றியூரில் 5 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், பூப்பந்தாட்ட கழக தலைவர் மதியழகன், பொதுச்செயலாளர் எழிலரசன் முன்னிலையில், கே.பி.சங்கர் எம்எல்ஏ வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாக சீருடை வழங்கி வெற்றிப் பெற வாழ்த்தி அனுப்பிவைத்தார். இவர்கள் தற்போது கேரளாவில் நடைபெற்றுவரும் பூப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

Tags : National Senior Badminton Tournament ,Tamil Nadu , National Senior Badminton Tournament: 20 players from Tamil Nadu will participate
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...