சென்னை: அதிமுகவை பாரதிய ஜனதா கட்சி எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என எப்போதும் பாஜக வற்புறுத்தியதில்லை என்று கூறினார்.