கேரளா: முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கான நீர்திறப்பு 750 கனஅடியில் இருந்து 1,867கனஅடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கான நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் உபரிநீர் திறக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லோயர் கேம்ப் முதல் வைகை அணை வரையிலான நீரோட்ட பகுதியில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.