×

தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4,437 பாசனக் குளங்கள் 100% நிரம்பின..!!

சென்னை: தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 4,437 பாசனக் குளங்கள் 100 சதவீதம் நிரம்பின. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1340 பாசனக் குளங்களில் 735 குளங்கள் நிரம்பின. தஞ்சாவூர் மாவட்டத்தில் 403 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. கடலூர் 61, திண்டுக்கல் 97, தருமபுரி 37, பெரம்பலூர் 32, நாமக்கல் 30, சென்னை 15, குமரி 14, கோவை 12 குளங்கள் நிரம்பியது.


Tags : Water Resources Department ,Tamil Nadu , Tamil Nadu, Department of Water Resources, 4,437 irrigation ponds
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...