×

உடுமலை அருகே விபத்து வேன்-டெம்போ மோதி 4 பேர் பலி

உடுமலை :  உடுமலை அருகே மடத்துக்குளம் அடுத்துள்ள நரசிங்காபுரத்தில் வேன்-டெம்போ நேருக்கு நேர் மோதி 4 பேர் உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். மில் தொழிலாளி. இவரது தாய் ரக்ஷிதா பேகம் (55). இவர் தன்னுடைய மருமகள் ஆஷிபா பானு (35), பேத்தி  சஷ்மிதா (10), பேரன் இஸ்மாயில் (14) ஆகியோருடன் உடுமலையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு நேற்று வாடகை வேனில் சென்றார். வேனை நரசிங்காபுரத்தை சேர்ந்த டிரைவர் முத்து (57) ஓட்டினார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு அவர்கள் அனைவரும் வேனில் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மடத்துக்குளம் அருகே உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்காபுரம் பகுதியில் வந்தபோது டிரைவர் முத்துவின் கட்டுப்பாட்டைஇழந்த வேன் தாறுமாறாக ஓடியது. அப்போது வெள்ளரிக்காய் பாரம் ஏற்றிக் கொண்டு மடத்துக்குளத்திலிருந்து உடுமலை மலையாண்டிக்கவுண்டனூர் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்த டெம்போவும், வேனும் நேருக்கு நேர் மோதியது.

இதில் நொறுங்கிய வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆஷிபா பானு, ரக்ஷிதா பேகம், சஷ்மிதா மற்றும் டிரைவர் முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய இஸ்மாயிலை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இவ்விபத்தில் உயிரிழந்த சஷ்மிதா தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வந்தார். இவ்விபத்தால் இந்த நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றிய பிறகு போக்குவரது சீரானது. இவ்விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Udumalai , Udumalai : 4 people were killed in a head-on collision between a van and a tempo at Narasinghapuram near Madathikulam near Udumalai, Tirupur district.
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்