புதுடெல்லி: குஜராத்தின் நாடியாட் பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் மைனர் மகளின் ஆபாச வீடியோவை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆன்லைனில் வெளியிட்டான். இது பற்றி அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தனது உறவினர்களுடன் சென்று தட்டிக் கேட்டார். அப்போது, எல்லைப் பாதுகாப்பு படை வீரரை சிறுவனின் உறவினர்கள் அடித்து கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.