×

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய குடும்பத்துடன் துபாய் பயணம்: அமெரிக்கா செல்ல திட்டம்?

கொழும்பு: இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே இருந்த போது, நாடு வரலாறு காணாத நிதி, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து, மேலும் கோத்தபயவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கினர். இதனால் இலங்கை ராணுவ விமானத்தில் மாலத்தீவு தப்பியோடிய கோத்தபய அங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து சென்று விட்டு, கடந்த செப்டம்பரில் இலங்கை திரும்பினார். இந்நிலையில், நாடு திரும்பிய 3 மாதங்களுக்கு பிறகு, முதல் முறையாக அவர் தனது மனைவி லோமா, மகன் மனோஜ், மருமகள் செவ்வந்தி மற்றும் பேரக் குழந்தைகளுடன் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்றார். 2019ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபய தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார். ஆனால் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அமெரிக்க பிரஜைகள் ஆவர். அதனால் அவர்கள் அங்கிருந்து அமெரிக்கா செல்லக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags : president ,Gotabaya ,Dubai ,America , Former Sri Lankan President Gotabaya's Family Trip to Dubai: Plans to Go to America?
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்