×

 பராமரிப்பு பணியால் இன்று கொளத்தூர் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கொளத்தூர் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (27ம் தேதி) காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் பகுதி-6க்குட்பட்ட கொளத்தூர் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது. எனவே, பகுதி-6க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் பகுதி அலுவலர்களையும் பகுதிப் பொறியாளர் - 6 (திரு.வி.க நகர்) கைபேசி எண்.81449 30906, துணை பகுதிப் பொறியாளர்-6 கைபேசி எண்.81449 30256 மற்றும் தலைமை அலுவலக புகார் பிரிவு எண்ணிலும் 044-4567 4567 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kolathur ,Chennai Water Board , Kolathur Sewage Treatment Plant will not function today due to maintenance work: Chennai Water Board informs
× RELATED செங்கல்பட்டு அருகே அறுவடை செய்ய நெல்...