சென்னை: தமிழகத்தில் 4,517 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகஉணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் மற்றும் கிடங்குகளை பார்வையிட்டார். தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர் மற்றும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இதுவரை 4,517 நியாய விலை கடைகள் ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்றுள்ளன. மேலும், 2,800 நியாயவிலைகடைகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் அந்த கடைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முழுநேர கடைகள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளையும் சீரமைக்க அவகாசம் தேவைப்படும் என தகவல் தெரிவித்தார்.