சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் துணை ஆட்சியர் ஸ்வேதாசுமன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.