சென்னை; கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் 27.12.2022 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பகுதி-6-க்குட்பட்ட கொளத்தூர் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் 27.12.2022 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் பகுதி-6க்குட்பட்ட கொளத்தூர் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது.
எனவே, பகுதி-6-க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் பகுதி அலுவலர்களையும் மற்றும் தலைமை அலுவலக புகார் பிரிவையும் தொடர்பு கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.