சென்னை: மகாகவி பாரதியாரின் பேத்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மாககவி சுப்பிராமணிய பாரதியாரின் மகள்வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையார் அவர்கள் 94 வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசையாசிரியரகப் பணியாற்றிவர் என்பதோடு பாரதியாரின் பாடல்களை இசைவடிவில் பரப்பும் தமிழ்ப்பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த தமிழ்க்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லலிதா பாரதி அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் உறவினர்கள். தமிழார்வலர்கள் உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தொிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்