×

வேணுகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீஆண்டாள் தாயார் கண் திறந்ததாக பரவசம்: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஸ்ரீஆண்டாள் தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கும் மூலவர் போல் தினமும் பூஜைகள் நடப்பது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதால் அனைத்து கோயில்களிலும் காலையிலும், இரவிலும் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இதனால் வழக்கத்தைவிட அதிகளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரள்கின்றனர்.

இந்நிலையில் ஆண்டாள் தாயாருக்கு வழக்கம்போல் நேற்றிரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அப்போது ஆண்டாள் தாயாரின் கண்கள் திறந்த நிலையில் காணப்பட்டதாக காட்டுத்தீ போல் தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமானோர் கோயிலுக்கு வந்து ஆண்டாள் தாயாரை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர்.


Tags : Venugopala ,Swami ,Sri ,Andal ,Telangana , Venugopala Swami Temple: Sri Andal's mother opens her eyes, ecstatic: Telangana stirs
× RELATED ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்வு