×

அமெரிக்காவை வாட்டும் பனிப்புயலால் பலி 34-ஆக அதிகரிப்பு: கிறிஸ்துமஸ் நாளில் வீடுகளில் முடங்கிய அமெரிக்க மக்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவை வாட்டி வதைக்கும் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே பனி புயலும் மக்களை வாட்டு வதைக்கிறது. மிக கடுமையாக வீசும் இந்த பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டு இருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலோ முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பனி பொலிவு, பனி புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க் நகரின் பஃபலோ பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மணிக்கு 64கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் சாலைகளில் பனி கட்டிகள் குவிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 4 முதல் 6 அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் குவிந்து கிடப்பதால் அமெரிக்காவின் 48 மாகாணங்களின் மைனஸ் டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உறையவைத்துள்ளது. கடும் பனிபொழிவால் நாளை வரை விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று நியூயார்க் நகர் மேயர் கேத்தி ஹோச்சல் தெரிவித்துள்ளார். கடும் பனிபொழிவால் அமெரிக்காவின் 60% மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அத்திவாசியா பணிகள் கூட முடங்கி உள்ளன. இந்நிலையில், கடும் 5 நாட்களாக கடுமையாக வாட்டி வந்த பனிப்பொழிவும், பனி புயலும் படிப்படியாக குறையுமென்று அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.  


Tags : US ,Americans ,Christmas Day , America, blizzard, sacrifice, increase, Christmas, people
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!