×

இலங்கைக்கு கடத்த முயற்சி 1.5 டன் பீடி இலையுடன் லாரி டிரைவர் கைது

குளத்தூர்:  தூத்துக்குடி  மாவட்டம் குளத்தூர் அருகே வேம்பார் கடலோர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட  பெரியசாமிபுரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வேம்பார் கடலோர காவல் படை போலீசார், பெரியசாமிபுரம் கடல் பகுதியில் ரோந்து  சென்றனர். அப்போது கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த லாரியை சோதனையிட்டனர்.

அதில் 43  பண்டல்களில் சுமார் 1500 கிலோ பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில் இவை இலங்கைக்கு  கடத்தப்பட இருப்பதும் தெரியவந்தது. லாரியுடன் பீடி இலைகளை  பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டிவந்த டிரைவரான தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lorry ,Sri Lanka , Lorry driver arrested with 1.5 tons of beedi leaves for smuggling to Sri Lanka
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...