திண்டுக்கல்: பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி நேற்று திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், தென் மாவட்ட மக்கள் பயன்படக்கூடிய மிகப்பெரிய திட்டம் சேது சமுத்திர கால்வாய் திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். ஒன்றிய அரசு உடனடியாக இத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக திராவிட கழகம் போராட்டம் நடத்தும், என்றார்.