×

மின்சாரம் பாய்ந்து 5 பசுமாடுகள் பலி

செய்யூர்:  செய்யூர் அடுத்தது பாளையூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த மாரி, மகேந்திரன், வெங்கடேசன், விநாயகம் ஆகிய 4 பேரும் பசுமாடுகள் வளர்க்கின்றனர். இவர்கள் தினமும் தங்களது பசுக்களை மேய்ச்சலுக்காக அவர்களது வீடுகளில் இருந்து அவிழ்த்து விடுவது வழக்கம். இதேபோன்று நேற்று காலை நால்வரும் தங்களது பசுக்களை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டனர். இந்நிலையில் பசுக்கள் அங்குள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது வயல்வெளி பகுதி வழியாக இருந்த மின்கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து விழுந்தது. 5 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தன. தகவலறிந்த பசுக்களின் உரிமையாளர்கள் அங்கு சென்று இறந்த பசுக்களை மீட்டனர். மின்வாரியத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துவந்து ஆய்வு மேற்கொண்டதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் பசுக்களை இழந்த உரிமையாளர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.


Tags : 5 cows died due to electric shock
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...