×

49ம் ஆண்டு நினைவு நாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

சென்னை: பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு நேற்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், மோகன், பரந்தாமன், தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, ஐட்ரீம் மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், மாவட்ட செயலாளர் சிற்றரசு, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர் மதன் மோகன், தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாரின் 49வது நினைவுநாள். வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; மறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Periyar , Chief Minister pays homage to Periyar statue on 49th anniversary
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...