×

ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,608க்கு விற்பனை.. நகை பிரியர்கள் ஏமாற்றம்..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,608க்கு விற்பனையாகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இம்மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டும் நிலை ஏற்பட்டது.

இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.40,528க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,006-க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் மக்களை  தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,608-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,076-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.74.00-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை உயர்வை கண்டிருப்பது இல்லத்தரசிகள் இடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai , Chennai, Thangam, Savaran, Rs. 80 increase
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!