×

சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை: சசிகலா பேட்டி

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் நேற்று சசிகலா கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனியாக இருக்கும் போது ஒருவரை பற்றி ஒருவர் பேசிக்கொள்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒரு தாயை போல, இருவருக்கும் ஒரு பொதுவான ஆளாகத்தான் இருக்கிறேன்.

அதிமுக தொண்டர்களையும் நான் பிரித்து பார்ப்பதில்லை. ஆறுமுகசாமி ஆணையத்திடம் இருந்து சிறைக்கு வந்த கடிதத்தில், நேரில் வந்து பதில் அளிக்கலாம், வழக்கறிஞர் மூலம் பதில் அளிக்கலாம், எழுத்து மூலம் பதில் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. நான் எழுத்து மூலம் பதில் அளிக்க முடிவு செய்து, ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்.

நாங்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டோம். ஆனால் ஜெயலலிதா தான் இங்கு சிகிச்சை நன்றாக உள்ளது. வெளிநாடு வேண்டாம் என்று தெரிவித்தார். சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதாதான்.ஒருவரை எதிர்க்க வேண்டும் என்றால் நேருக்கு நேர் நின்று எதிர்க்க வேண்டும். முதுகுக்கு பின்னாடி பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Jayalalithaa ,Sasikala , Jayalalithaa does not want to go abroad for treatment: Sasikala interview
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...