சென்னை: கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட ஏ.வி.எம் மயான பூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் மேற்கு சைதாப்பேட்டை அல்லது நெசப்பாக்கம் மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 135க்கு உட்பட்ட ஏ.வி.எம் மயான பூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 26.12.2022 முதல் 4.1.2023 வரை மேற்கண்ட மயானபூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள மேற்கு சைதாப்பேட்டை அல்லது நெசப்பாக்கம் மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.