×

நாக்கை அறுப்போம்... காலை வெட்டுவோம்’அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டல் பாஜ பெண் நிர்வாகி மீது வழக்குபதிவு

`தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த பா.ஜ. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.பி., சசிகலாபுஷ்பா எம்.பி., மீது வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பா.ஜ. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அதிமுக எம்.பி.யும், தற்போதைய பா.ஜ. மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘பா.ஜ. தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து பேசிய அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் விதமாக,

‘‘பா.ஜ. தலைவர் அண்ணாமலையை பற்றி பேசினால், அமைச்சர் கீதாஜீவன் நாக்கை அறுத்து விடுவதாகவும், வீட்டை விட்டு வெளியே வந்தால் காலை வெட்டி விடுவதாகவும்’’ பேசினார்.இதையடுத்து திமுக மாணவரணி நிர்வாகி சீனிவாசன் என்பவர், தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சசிகலா புஷ்பா மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசி மிரட்டல் விடுத்ததாக 3 பிரிவுகளின் கீழ் இந்திய தண்டனை சட்டம் 504, 505 (2), 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : BJP ,Minister ,Geetajeevan , We will cut off the tongue... We will cut off the leg'; Case filed against BJP woman executive who threatened Minister Geethajeevan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...