மும்பை: விளம்பரத்திற்காக வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த பொதுநல வழக்கில் மும்பை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சொகுசுக்கப்பலில் போதை மருந்து எடுத்துக்கொண்டதாக ஆர்யன்கான் கைது செய்யப்பட்டு, பின்னர் ஆதாரம் இல்லை என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.