×

பொன்னமராவதி அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே ஆட்டினை முழுங்கிய 10 நீளம் மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ளகீழதானியம் செம்பப்பட்டியை சேர்ந்தவர் சிவங்கி மகன் சரவணகுமார். இவரின் ஆடு அங்குள்ள பெரியகண்மாய் அருகே மேய்ந்து கொண்டிருந்து.

அப்பொழுது அங்கு கிடந்த 10 அடிநீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஆட்டை பிடித்து தலை பகுதியை விழுங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பொன்னமராவதி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆட்டினை முழுங்கிய மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். பாம்பு விழுங்கிய ஆடு உயிரிழந்தது.

Tags : Bonnamarawati , Ponnamaravati, python that swallowed a goat, firemen
× RELATED சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு