×

ரபேல் வாட்ச் பில்லை ஏப்ரலில் வெளியிடுவேன்: கோவையில் அண்ணாமலை பேச்சு

கோவை:  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாளையொட்டி கோவை தெற்கு மாவட்ட பாஜ சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுந்தராபுரத்தில் நேற்று நடந்தது. விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில்,

தமிழகத்தில் 100 சதவீதம் பூத் கமிட்டிகளை நிறைவு செய்து 2024 தேர்தலில் 25 எம்பிக்களை பெற்று கொடுக்க நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க வேண்டும். ரபேல் வாட்ச் குறித்து டீக்கடையில் பேசும்போதுதான் அரசியல் புரட்சி ஏற்படும். ஏப்ரல் மாதத்தில் நடைபயணம் துவங்கும்போது ரபேல் வாட்ச் பில்லை வெளியிடுவேன். பொதுமக்கள் புகார் அளிக்க வெப்சைட் துவங்கப்பட உள்ளது, என்றார்.



Tags : I will release Raphael Watch Bill in April: Annamalai speech in Coimbatore
× RELATED அமேதியில் போட்டியிட ராகுல்...