சென்னை: சென்னை பொது அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் குறை கேட்பு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இது குறித்து பொது அஞ்சல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள், குறைகள் இருப்பின் வாடிக்கையாளர்கள் இன்று காலை 11 மணிக்கு நேரில் வந்து தெரிவிக்கலாம். மேலும், சு.பாக்கியலட்சுமி, முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை 600001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.