×

தி.நகரில் அஞ்சல் குறைதீர் முகாம்

சென்னை: சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் அறிக்கை: தி.நகர், சிவஞானம் சாலையில் உள்ள சென்னை மத்திய மண்டல அலுவலகத்தில் டிச.29 மாலை 4 மணியளவில் அஞ்சல் குறைதீர் முகாம் நடக்கிறது. பொதுமக்கள் புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் பதிவு தபால், பார்சல், காப்பீடு, மணியார்டர், அனுப்புநர், பெறுநர் முகவரி உள்ளிட்ட தகவல் களுடன் அனுப்பவும். சேமிப்பு வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை சான்றிதழ் குறித்த புகார்களும் அனுப்பலாம். dochennaicitycentral@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம். அல்லது தி.நகர், மயிலாப்பூர், சூளைமேடு, ராயப்பேட்டை, கிரீம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோபாலபுரம், திருவல்லிக்கேணி, தி.நகர் வடக்கு,  தி.நகர் தெற்கு, இந்தி பிரசார சபா, மந்தைவெளி, விவேகானந்தா கல்லூரி, சாஸ்திரி பவன், டிபிஐ வளாகம், தேனாம்பேட்டை மேற்கு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, லயோலா கல்லூரி, லாயிட்ஸ் எஸ்டேட், முதன்மை கணக்காளர் பொது அஞ்சல் அலுவல கம், சேப்பாக்கம், சென்னை பல்கலைக்கழகம், பார்த்தசாரதி கோயில் ஆகிய அஞ்சல் அலுவலகங்களுக்கு தபால் மூலம் அனுப்பலாம்.

Tags : Camp ,D. Nagar , Mail Grievance Camp at D. Nagar
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு