×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த தரிசனத்திற்கு வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டிக்கெட்கள் என வருகிற 22ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்காக வாணி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10 ஆயிரம் நன்கொடையாக அளித்து 300 தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும் அனுமதிக்கப்பட்டு மகா லகு தரிசனம் செய்து வைக்கப்படும். எனவே, பக்தர்கள் இதனை கவனத்தில் வைத்து நன்கொடை செலுத்தி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Tags : Tirupati Edemalayan Temple , Vaikunda Ekadasi darshan tickets at Tirupati Seven Malayan Temple will be released online tomorrow
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.76 கோடி