திருப்பதி : திருப்பதி அடுத்த சந்திரகிரியில் காங்கிரஸ் கட்சி மாஜி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம் காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(76). இவர் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளராக இருந்தவர். இவரது நாகரத்தினம்மா(71). தம்பதிக்கு செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி உள்பட 2 மகன்கள் உள்ளனர். செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சந்திரகிரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில், சுப்பிரமணியத்திற்கு கடந்த சில மாதங்களாக மூச்சு விடுதலில் பிரச்னை இருந்தது வந்துள்ளது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் திருப்பதி சுவீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். இதையடுத்து, அவரது சடலம் சந்திரகிரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு தெலுங்கு நடிகர் மோகன்பாபு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, கலெக்டர் வெங்கடரமணா மற்றும் இணை கலெக்டர் பாலாஜி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை தும்பலகுண்டா பகுதியில் உள்ள மயானத்தில் இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.